பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமாதானம் போருக்குக் கச்சை கட்டும் " போக்கிரிகள் வஞ்சகத்தை ஊருக்கு ஊர் திரண்டு ஒழிப்பதற்கே .... சமாதானம் ! 1 அதிகார வெறி கொண்டு - ஆதிக்கப் போர் தொடங்கும் சதிகாரர் திட்டத்தைச் சாய்ப்பதற்கே... சமாதானம்! 2 அப்பாவி மக்கள் தமை அழிக்கின்ற வல்லரசின் கைப்பாவைக் கூலிகளைக் கவிழ்ப்பதற்கே... சமாதானம் ! 3 அண்டை அயல் நாட்டில் அநியாயப் போர் நடத்திச் சண்டையிடும் போர்வெறியர் தகர்வதற்கே ... சமாதானம்! 4 கொரியாவில் நடக்கின்ற கொலைச்செயல்கள் உலகெங்கும்