இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
135 ரகுநாதன் என்றாலும், புத்தகப் புழுவாகி, புத்தி தடுமாறி, சென்ற பத்து வருஷ மதாய்ப் பாரதத்துக் கலையுணர்வில் சித்தம் இழந்து, தமிழ்ச் சிறுகதைகள், கவியெழுதிப் பத்திரிகைத் தொடர்பேற்று, பசி மறந்தும் பாடுபட்டுச் செத்தும், தமிழ்க்கலைகள் சீவிக்க வேண்டுமென்று நித்தம் உழைத்தலுத்தும் ' நெஞ்சம் அலுக்காத நானும், எனையொத்த நண்பர் சிலபேரும் வேணுங் கலைவளர்க்க வீராபுரம் சென்றோம். வீராபுர மதனில்--- மார்க்ஸைப் படித்தவர்கள், மக்கள் மக்கள் என்பவர்கள், கார்ச் சங்க மேடையிலே கழகம் அமைத்தார்கள். வாரமுறை தவறாது வாய்வீச்சு வீரர்குழாம்