பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் வீரியர்க்கே தமிழ்க்கன்னி விரும்பி அருள் புரிவாள் ! ஆதலினால்- பிஞ்சிளமை வாலிபத்துப் பெண்ணரசி தமிழ்க் கன்னிக் கஞ்ச மலர்க் கரத்தைக் கண்ணொற்றி, கவிவாணர் நெஞ்சை விட்டு நீங்காத' அன்னாள் நிலை குலையாச் செஞ்சொல் இளமையினைச் செப்பி வழி மீளுகின்றேன்! 1981