பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 தோன்றல் பெரு வீரன் மல்லன் மாருதியின் மகிமை பாடுமிந்த சொல்லரங்கில் சில வார்த்தை சொல்லத் துணிந்துவிட்டேன். பார்மேவும் பிரகிருதிப் பருப்பொருளின் வளமையெலாம் சீர்மேவும் கவிபாடிச் சென்றிட்டார் பிறபுலவர். என்றாலும்- நீர் மேவும் வளமேயோ நிலமேயோ நெருப்பேயோ ஆர்பாடிச் சென்றாலும் அந்தப் பொருளனைத்தும் பேர்மேவும் காற்றுவழிப் . பிறப்பெடுத்த தல்லேயோ? ஆதலினால்- வானின்றிழிந் திரங்கி வரம்பு கடந்தகன்று ஆனதொரு பூவுலகில் அமைந்த பொருட்கெல்லாம் வானவனாய், எங்கெங்கும் வளர்ந்து நிறைந்தவனாய் தானமைந்த காற்றவனே தாயாவான் அல்லேயோ? ஆனதினால்- மண்ணுலக ராசிகட்கு - மாதாபோல் காட்சி தரும் எதி, த ராசிக்கும்