பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஞ்சலும் இலர் 1 புறத்தின் ஒரு பாடல் பொருளை, தமிழ்க்குலத்தின் மரத்தை எடுத்துரைக்க வரவழைத்த வானொலியே! வானொலியின் முன்னிலையில் வாக்குரைக்க வந்தகவி - வாணர் திருக்குழுவே! வாணர் திருக்குழுவின் வாசகத்தைக் கேட்பதற்காய் வந்துற்ற அவைத்தலைவ! காற்று கொணர்ந்து தரும் கவியை நும்செவிவாய் ஏற்றுக் களிக்கின்ற எந்தமிழ் நன்னாட்டாரே ! உமக்கெல்லாம்- வணக்கம், வணக்கம். இதோ சுணக்கமின்றி என்கவியைச் சொல்லத் தொடங்குகிறேன், 2 உலகம் நிலைத்திருக்கும் உண்மையினைப் பண்டொருநாள் அலைவாயில் மாண்டொழிந்த அறிஞன் பெருவழுதி "