பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வளமுற - அறிவு மானுடர்தம் புவிவாழ்க்கை வளமைபெறும் வகைபலவும் தானுணர்த்தும் கவியரங்கின் தலைவா !-மற்றிங்கே. நானுரைக்கும் கவிதையினை நன்னயமாய்க் கேட்டருளும் வானொலியின் நேயர்களே ! வணக்கம் : பலவணக்கம். 2. நேயர்களே! ஒரு வார்த்தை . நீள்புவியில் மானிடர்தம் நெறியை வளம்படுத்தி வாழ்வளிக்கும் மார்க்கங்கள் வகை வகையாய்த் தோற்றிடினும் ஆழ்ந்துணர்ந்து நாம்சற்றே ஆராய்ந்தால், சிந்தித்தால், அவையெல்லாம்-- - அறிவென்னும் பேரொளியின் ஆட்சியினுக் குட்பட்ட பிரிவினைகள் தாமன்றிப் பிறிதில்லை என்றறிவோம்.