பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரும் பிள்ளாய் எழுத்தாளரே ; "என்ன அவசரம் 'வே! ஏங்காணும் பறக்கின்றீர்? சென்னைமா நாட்டுக்குச் செல்கின்ற வீறாப்போ? வாரும் வே! வந்து உட்காரும் நீர் தாமோ எழுத்தாளர் ? கட்டுக்கதை யென்று கவியென்று, கீரவம்ச வெட்டும் புலியென்று வீம்பிட்டு, பத்திரிகைக் குட்டம் நிறைத்து குளப்பாசி வண்ணத்தில் அட்டையிட்டு, அழகாக அச்சிட்டு, நூலென்று கொட்ட மடித்துநிதம் கும்மாளம் போட்டாடும் நீர்தாமோ எழுத்தாளர் ? நெஞ்சைச் சுட்டறுத்து, நினைவை வறுத்தெடுத்து, எஞ்சியதை வார்த்தைகளில், இறுத்து வடிகட்டி,