பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் நெற்கொண்டு போமளவும் நில்லாயோ ?' என்றுரைத்துச் சொற் கண்டானும் உமக்குச் சொந்தம்தான்! ஆனாலும் ஈசன் படியளக்கும் இதிகாச லோக!மல்ல) ! ரேசன்படி யளக்கும் ரெண்டுகெட்ட காலம்மையா ! காந்திமகான் பேருரைத்து கதரால் கறைமறைத்து, சாந்தி, சாத்வீகம், சர்வபரித் தியாகமென்று ஓந்தித்தனம் காட்டும் , உம்முடைய முதலாளி தியாகத்தை, தருமத்தைத் திறமையுடன் போதிப்பார் ! காசென்றால்- - வியாகூலம் எய்திடுவார் ! - விம்மி மனம் உடைவார்! நீரேதான்- கம்பனுக்குப் பின்னாலே கலைவாணி “ரீஜெண்டாய்' அம்புவியில் வந்து அவதரித்தீர் என்றெல்லாம் கும்பிடுவார் ! அதை நம்பிக் குனிந்து கொடுக்காதீர் !