பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பிதழ் 'பத்திரிகை ஆசிரியர் பாரதியார் ஸ்பெஷலுக்கு ரத்தினம் போல் சிறுபாடல் நல்கிடணும் என்றெனக்கு உத்திரவு போட்டிருந்தார். அன்றிரவில் : பத்தரை மணியடித்தும் படுக்கைக்குப் போனபின்னும் நித்திரை கொள்ளாமல் நெஞ்சுக்குள் எதேதோ சித்திர வதை செய்ய, சிந்தனையைச் செள்ளரிக்க எத்தை எழுதுவதாம் என்ன எழுந்திருந்து . கத்தைக் காயிதத்தைக் கரியாக்கத் திட்டமிட்டேன், பேனாவைக் கையெடுத்தேன் ; பேப்பரினை முன்விரித்தேன். ஆனாலும் உள்ளத்தில் அணுவளவும் கற்பனையும் தோணவில்லை. 2 - எத்தை எழுதுவதாம்? என்றைக்கோ-