பக்கம்:ராஜாம்பாள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i84, இராஜாம்பாள்

கைத்துப்பாக்கியால் சுட்ட சத்தத் தையும் ஊதின சத் தத்தையும் கேட்டு மூன்று போலீஸ்காரர்கள் ஓடிவந்தார் கள். அவர்களில் ஒருவனே அனுப்பித் தயார் செய்து வைத்திருந்த வாரன்டுகளைக் கொண்டுவரச் சொல்வி நரசிம்மலு நாயுடுவையும் கொள்ளிக்கண்ணனையும் அமா வாசையையும் பிடித்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டு, இன்னொரு கான் ஸ்டேபிலை அனுப்பிக் குடிக் கூலி மோட் டார் வண்டி கொண்டுவரச் சொல்லி லோகசுந்தரியை பும் நடேச சாஸ்திரிகளையும் வாரன்டில் பிடிப்பதற்காக அழைத்துவரச் சொன்னபடி வந்திருந்த இரண்டு கான்ஸ் டேபில்களேயும் அழைத்துக்கொண்டு காலதாமதஞ் செய் யாமல் நானும் ராஜாம்பாளும் செஷன்ஸ் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். இன்னும் இதில் ஏதாவது சந்தேகங் கள் இருந்து கேட்டால் அவைகளே நிவர்த்தி செய்வதில் யாதோர் ஆட்சேபமும் இல்லை.

கோவிந்தன் இவ்வாறு சொல்லி முடித்தார்.

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/198&oldid=684740" இலிருந்து மீள்விக்கப்பட்டது