பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

139

திடுமென்று உள்ளே வரும் லோகா, “ரெண்டுபேரும் சுவாரசியமா அரட்டையடிக்கிறீங்க, டெலிபோன் மணி அடிச்சது கூடத் தெரியல. மைத்ரேயி, இன்னிக்குச் சாயங் காலம் உன்னை ஹோமில் கொண்டுவிடப் போறேன். தயாராக இரு!” என்று கூறிவிட்டுப் போகிறாள். மைத்ரேயி துணுக்குற்றாப்போல் நிற்கிறாள்.


8

சாயங்காலம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்ற லோகா எப்போது திரும்பி வரப் போகிறாளோ என்ற துடிப்புடன் காத்திருக்கிறாள். மதுரமும், அநுசுயாவும் அந்த விடுதிக்கு அவள் செல்வதை ஆதரிக்கவில்லை. விடுதியில் அவளுக்குப் பாதுகாப்பாகத் தங்க இடமும், கஞ்சியோ, கூழோவானாலும் பசி தீர்க்க உணவும் கிடைக்கும்; கல்விக்கும் வழியுண்டு. கிடைத்த பிடியை விட்டுவிடாமல் மேலேறிச் செல்லும் உறுதி அவளுக்கு இருக்கிறது. வேலை செய்து கொண்டு கூலி பெறாமல் படிக்க வேண்டும் என்றாலும் அவளால் இயலும். இதே சமையல் வேலையானாலும் சரி; கழுவிப் பெருக்கி, துடைத்து, நீர் சுமந்து உடல் வருந்த வேலை செய்வதானாலும் சரி; அவளுக்குப் படிப்பு ஒன்று தான் குறி. நல்ல பரம்பரை அழிந்து விடுமென்று அவள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? அந்த சாதியிற்பட்ட அவளுக்கு தொழிற் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றாலும் இடம் கிடைக்காது. விடுதிப்பெண்ணாக, அநாதையாக முத்திரை பெறுவதில் இலாபமே ஒழிய நஷ்டம் இல்லை.

உள்ளம், வெளிச்சமில்லாத வெண்மையில்லாத திரையிலே பொன்மயமான கற்பனைகளையே தீட்டி அழிக்கிறது.

அநுசுயா வழக்கம்போல் ஆறுமணிக்கே விடுதிக்குப்போய் விடுகிறாள். இரவு சமையலை முடித்து பாலாவுக்குச் சாப்பாடு போடுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/141&oldid=1102855" இலிருந்து மீள்விக்கப்பட்டது