பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

349

"ஏம்பா, ஆஸ்பத்திரிக்கு ஒரு நோயாளியை அழைத்து போகனும் வரியா?”

“என்ந்தாசுபத்திரி ” என்று அவன் திரும்பிக் கேட்கையில்யில் மைத்ரேயிக்கு முட்டாள்தனம் உறைக்கிறது. மட்டி, ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு ரிக்ஷாவில் வைத்து அழைத்துச் செல்லமுடியுமா? எவரேனும் தனி மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் என்ன ? அவளிடம் பணம் இருக்கிறது. மதுரத்தைக் குணமாக்க அவள் எந்த வகையிலேனும் உழைத்துப் பணம் சம்பாதித்துச் செலவழிக்கக் கடமைப்பட்டிருக்கிறாள்.

தெருவில் வரும்போது எத்தனையோ டாக்டர் பலகைகள் கண்களுக்குத் தென்படுகின்றன. ஆனால் தேவை மிகுந்து தேடிப் போகும்போது ஒன்றும் புரிவதில்லை. பெயர்ப் பலகைகளைப் பார்த்துக்கொண்டு அவள் தன்னை மறந்தவளாகப் பித்தியைப் போல் நடக்கையில் ‘டாக்டர் நித்யானந்தம், எம்.பி.பி.எஸ்’ என்ற பலகை ஒன்று பழைய மாம்பலம் தெருவொன்றில் தொங்குகிறது. அடுத்த அடிவைக்காமல் அந்த உச்சிநேரத்தில் அவள் படியேறிக் கதவைத் தட்டுகிறாள்.

“அப்பப்பா...பெரீ நியூஸென்ஸாப் போச்சு...” என்று யாரோ முணுமுணுத்துக்கொண்டு கதவு திறக்குமுன். “ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர். யாரும்” என்று சொல்லிக் கொண்டே திறந்தவள் அடுத்த சொல் எழுப்பாமல் நிற்கிறாள். மைத்ரேயிதான் சுதாரித்துக்கொண்டு, ‘நான் டாக்டரை தேடிட்டு வந்தேன். டாக்டர். டாக்டர் இருக்காரா?” என்று கேட்கிறாள்.

“டாக்டரா? அவர் சாயங்காலம்தான் வருவார். விஸிட்டிங் அவர் நாலிலிருந்து ஆறுவரை, நீ...நீங்க. நீ. மைத்ரேயி இல்லேடி? நான் யாரோ ஃபோன் பண்ண வந்து சும்மா தொந்தரவு குடுக்கறதாக நினைச்சு ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர்னு சொல்லிட்டே திறந்தேன், மைத்ரேயி தானே நீ?”

“ஆமாம், நீ...நளினி, இல்லே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/351&oldid=1101444" இலிருந்து மீள்விக்கப்பட்டது