பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ரோஜா இதழ்கள்


ணைக் குலைக்கிறது. அந்தச் சடங்கு கொடுக்கிற கவுரவத் தைக் கொடுக்குமா?...

இவங்களை எனக்கு நல்லாத் தெரியும். நீ போயிடு.”

மைத்ரேயி தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவிக்கிறாள். எனினும் வாலறு பட்டமாய் மரத்தில் சிக்கிச் சூறாவளிக் காற்றில் விடுபடாமல் தவித்துத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

இரவெல்லாம் மைத்ரேயி உறங்கவில்லை. விடியற்காலையில் தான் அவள் சற்றே அயர்ந்திருக்கவேண்டும். ஏனெனில் அம்மணியம்மா அவளைத் தொட்டு எழுப்புகிறாள். “பல் விளக்கி முகம் கழுவிக் குளிச்சிக்க, மாணிக்கத் திடம் காப்பி வாங்கித் தரச் சொல்கிறேன்!” கனவில் நடப்பது போலிருக்கிறது.

ஒரு பர்சில் பத்துப் பத்து ரூபாயாக ஐந்து நோட்டுக் களை வைத்துக்கொடுக்கிறாள். “வச்சுக்க, மாணிக்கம் குதிரை வண்டி கொண்டாரப் போயிருக்கிறான். பாலத்தடியிலே போயி நில்லு வந்த உடனே ஏறிட்டுப் போயிரு, எப்பன்னா லும் என்னை நினைப்பு வரும். அப்ப உடனே ஆண்டவனை நினைச்சு மன்னிப்புக் கேளு...”

அம்மணியம்மா முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

மைத்ரேயி அவள் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்ளக் குனிகிறாள். அவள் சரேலென்று தடுத்து நிறுத்தி விடுகிறாள்.

“போ...போ... !”

மைத்ரேயி தன் துணிப்பையுடன் அந்த வீட்டைவிட்டு வெளியே வருகிறாள்.

மொட்டை மொட்டையாக ஆங்காங்கு கற்குன்றுகளும், இடையே கோபுரமுமாகத் தெரியும் மாம்பாக்கம் கிராமத்தை மைத்ரேயி தன் நினைவு தெரிந்த நாளாகப் பார்த்திருக்கிறாள். இவ்வளவு அழகாக அந்த ஊர் இதுவரையிலும் தென்பட்டதில்லை. கொத்துக் கொத்தாகத் தென்னந் தோகைப் பசுமைகள், மாமரங்கள், கடைத்தெருவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/58&oldid=1099777" இலிருந்து மீள்விக்கப்பட்டது