74
லியோ டால்ஸ்டாயின்
அவ்வளவு மக்களும் வழிச் செலவுப் பணத்துக்கு எங்கே போவார்கள்? ருஷ்ய ஆட்சி அதற்கு ஏதும் வழி செய்ய மறுத்து விட்டது. ஆனால், இதைக் கண்ட டால்ஸ்டாய், ஜார் மன்னன் ஒருகாசு கூடக் கொடுக்கமாட்டான் என்பதை உணர்ந்தார்.
உடனே, இங்கிலாந்து ஃபிரான்ஸ், ஜெர்மன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களுக் கெல்லாம் உண்மை நிலையைக் கூறி, பண உதவிகளைச் செய்ய வேண்டுமென்று டால்ஸ்டாய் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கும் மேலாக, தனது மனிதாபிமான மனத்தோடு, டால்ஸ்டாய் எழுதிய அதாவது ‘மறுபிறவி’ என்ற தம்முடைய நூலின் வருமானத்தை ‘ஆண்டவனோடு போராடுவோர்’ சங்கத்து மக்கள் இனம் கனடா நாடுக்குப் போக வழிப்பயணச் செலவுக்காகக் கொடுத்தார். அதனால் அவர்கள் கனடாவுக்குப் போனார்கள்.
ஓர் இனமக்களை மனிதாபிமானமற்று, குறிப்பாக வழிச் செலவுகளுக்குக் கூட பணம் தராமல் விரட்டியடித்த ஜார் மன்னனது கொடுங்கோலை உலக நாடுகள் எல்லாமே கண்டனம் செய்தன.
ஆனால் அந்த இன மக்களது வாழ்க்கை மேம்பட, டால்ஸ்டாய் செய்த கிளர்ச்சியால், அவர் செய்த உதவியால், அவரை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் போற்றிக் கொண்டடினார்கள். இந்த ஓர் அற்புதமான பேருதவியை எண்ணிப் பார்த்த மக்கள், டால்ஸ்டாயை உலக மனித நேய மகான்களிலே ஒருவர் என்று போற்றி மகிழ்ந்தார்கள்.