பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ix



    இந்த சொற்களைக் கேட்கும்போது மனித வாழ்க்கையின் முடியாத போரில் என்றுமே முழங்கி முடியாத முரசங்கள் உங்களுக்குக் கேட்கவில்லை? அவை கேட்காவிடில் இந்த நூலால் உங்களுக்குப் பயன் இல்லை. அவை செவிகளில் கேட்பதோடு உங்கள் இதயத்துடிப்புடன் ஒன்றி உங்கள் நிம்மதியைப் பாதித்து விட்டால், திரு. சமுத்திரத்தின் ’லியோ டால்ஸ்டாய்’ நாடகத்தில் உயிர் உள்ளது, ஓட்டம் உள்ளது, நளினம் உள்ளது,நகைச்சுவை உள்ளது என்றெல்லாம் வேறு நலங்களைப் பட்டியல் போட்டு நான் கட்டியம் கூறத் தேவை இல்லை!
   நண்பர் சமுத்திரத்தின் இந்த நல்ல படைப்பை நான் நன்றியுடன் பாராட்டுகிறேன். அவர் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றி வரும் பணி ஆலென வேரூன்றி, கடல் எனப் பரந்து, வானென அவர் புகழ் ஓங்கி உயரவும், அவருக்கு நலங்கள் எல்லாம் நிறையவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
                                         அன்பன் 
                                      வி. இராமமூர்த்தி
'பாகீரதி’,
மனை 285, கதவிலக்கம் 82,
முதல் அவென்யூ,இந்திரா நகர், 
சென்னை - 600 020.