பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை



      என் நண்பர் திரு. சு.சமுத்திரம் அவர்கள் தமிழ் இலக்கியம் படைக்கும் துறையில் விரைவாகப் புகழ் ஈட்டிவரும் நல்ல எழுத்தாளர். சில ஆண்டுகளாக அவரையும் அவருடைய எழுத்துப் படைப்புக்களையும் அறிந் தவன் என்ற முறையில் அவர் எழுதியுள்ள ’லியோ டால்ஸ்டாய்’ என்ற நாடக நூலுக்கு மிக்கமகிழ்ச்சியுடன் இந்த நூன்முக உரையை எழுதுகிறேன்.
      திரு.சமுத்திரத்தின் கவிதைகளையும், சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாட கங்களையும் அறிந்தவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள மனிதர்களின் தன்மைகளையும் எண்ணங்களையும் பேச்சுக்களையும் செயல்களையும் அவர் எவ்வளவு நுணுக்கமாகவும் உன்னிப்பாகவும் கவனிக்கிறார், கிரஹித்துக் கொள்கிறார். தம் எழுத்து வன்மையினால் உருக்கொடுத்து உலாவ வைக்கிறார் என்