பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் + 73 சமாதி மண்ணாலேயே அமையனும். நான் பாமரர் களுக்கும் பாமரன். (இருமுகிறார்). நான் கடவுளைப் பார்க்கப் போகிறேன். கடவுள் கிட்டப் போகிறேன்... செர்ட்கோவ். கடவுள் வாழ்த்து படிக்கிறாயா... என் சோன்யா... காஷா... என் பிரயாணம். நான். கடவுளை... பார்க்க... (தலைசாய்கிறது). எல்லோரும் மெளனமாக இருக்க லியோ’ என்ற குரல் ஒலிக்கிறது. சோன்யா விரைந்து வருகிறாள். டால்ஸ்டாயின் அருகில் சென்று முகத்தை உற்றுப் பார்க்கிறாள். டால்ஸ்டாயின் நாடித்துடிப்பை பரிட்சித்துப் பார்த்துக்கொண்டிருந்த காஷா துக்கம் தாங்காமல் கண்ணிர் அரும்பிய கண்களுடன் காட்சியளிக்க- சோன்யா, காஷாவின் முகத்தை கேள்விக்குறியோடு பார்க்க காஷா தன் தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்துவிட்டு தலை குனிகிறார். லியோ என்று உரக்கக் கூச்சலிட்டவாறு சோன்யா நிலைகுலைந்து நிற்கிறாள். HR