பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாளக்கிராமத்து அடிகள் 6

சூழ்ந்த எல்லா உலகங்களாயும் இருப்பவன் இவன்தான் என்கின்றார். அந்தர் யாமியாக இருக்கும் இறைவனின் இருப்பைக் காட்டிய ஆழ்வார் அவதார தத்துவத்தையும் காட்டுவர். மான்களும், யானைகளும், குதிரைகளும் திரியும் காடும் கடந்து, வில்லையும் அம்பையும் துணை யாகக் கொண்டு, சேது கட்டி, மதில் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவனின் பத்துத் தலைகளையும் அறுத்தெறிந் தவனும் (1); மதநீரை யுடையனவாய் மலைகள் வடி வெடுத்து நடந்தாற்போன்றுள்ள யானைத் திறள்களும், குதிரைக் கூட்டங்களும் முழக்கம் செய்யும் பெரிய தேர் களும், காலாட்களுள் ஒன்றாகத் திரண்டு பெரிய கிளர்ச்சி யுடன் தோற்றிய இலங்கையைச் சுடுகாடாக்கியவனும்(2) இவனே. சூர்ப்பணகையின் மூக்கையறுத்து அவளைப் பிலம் போன்ற வாயைத் திறந்துகொண்டு கதறச் செய்த வனும்(5) இவனே. தாயாய் வந்த பேயாம் பூதனையின் உயிரையும், தயிரையும், வெண்ணெயையும் ஒன்று சேர்த்து அமுது செய்தவனும், அழகொழுகும் வாமன உருவத்துடன் சென்று இன்றே மூவடி மண் தா என இரந்து எல்லா உலகங்களையும் தானாக அளந்து கொண்டவனும் (6), நரசிம்மனாய் அவதாரம் செய்து இரணியனுடன் கடும் போரிட்டு, அவனுடைய நெஞ்சைப் பிளந்து உயிர் குடித்தவனும் (7); எந்தாய் சாபம் தீர்’ என வேண்டிய சிவனின் சாபத்தைத் தன் திருமார்பில் இலங்கும் அமிர்த நீரைக்கொண்டு தீர்த்தவனும் (8) இந்த எம்பெருமானேயாவான்.

இங்ஙனம் இராமனாயும், கிருட்டிணனாயும், திரிவிக் கிரமனாயும், நரசிம்மனாயும், எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாயும் உள்ள எம்பெருமானே அர்ச்சை வடிவாய் சாளக்கிராமத்தில் எழுந்தருளியுள்ளான். இந்த எம்பெருமானை அடியார் கூட்டமும், நித்திய சூரிகளும், பூனூல் இலங்கும் மார்பையுடைய அந்தணர்களும்,இவன் திருக்கோயிலைச் சூழ்ந்து நின்று இவனைச் சேவிக்