பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணங்கள் அனைத்திற்கும் மேலாக, சான்ருேர் உண்மை. யாம் காரணத்தையே பிசிராந்தையாரும் விதந்து கூறுவது காண்க. ஆகவே, வீட்டின் அமைதிகாக்கும் நல்லா?ள மனைவியாகப்பெற்ற ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், நாட்டின் அமைதிகாக்கும் நல்லோர்துணை நாடுவதிலும் வெற்றியே கண்டான். உள்ளம் உரைசெயல் என்ற மூன்ருலும் சிறந்த உயர்ந்த பெரியார்கள் பலரைத், தன் அரசவைக்கண் வைத்துப் பேணிப்புரந்து வந்தான்்.

வீட்டில் மனைவியும், நாட்டில் மாண்புமிகு சான்ருேரும் நல்லாட்சி புரிவது, வீடும் நாடும் பெருநிதி பெற்றவழியே ஆகும் ஆதலின், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், தன்நாட்டின் செல்வம் செழிக்க வழிபல வகுத்திருந்தான்். அதன்பயனுய், அந்நாட்டுக் கடற்கரைக்கண் ஆங்காங்கே காட்சிதரும் பேரூர் களுக்குச் சென்று கண்டால், அப்பேரூர்களின் தாழை மணங்கமழும் கானற்சோலைகள்தோறும் கட்டப் பெற்றிருக்கும் பண்டக சாலைகளில், கடல்வாணிகத்தின் வழியாகப் பெற்ற பொன்னும் நவமணியும் போலும் விலைமதிக்க ஒண்ணுவான் நிதிகள் வரையறை இன்றிக் குவிந்து கிடக்கும்.

இவ்வாறு செல்வம் கொழிக்கும்நாட்டிற்குப் பகைவர் பலராவர். ஆகையால், அத்தகு வளநாடு பெற்றவர், பகை வென்று நாடு காக்கும் பேராண்மையுடையராதலும் வேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்பால் அந் த ஆற்றலும் அமைந்து கிடந்தது. தன்னினும் பேரரசு செலுத்துவார் நாடுகள் மீது படையெடுத்துச் சென்று, தங்கள் தூசிப்படையின் அழிவுகண்டே அவர்கள் அலறிப்புடைத்து புறங்காட்டி ஓடிவிட, அன்னர் நாடுகளின் பெரும் பகுதியைத் தனதாக்கிக் கொள்ளும் தறுகளுளகிைய அவன், தன் ஆற்றல் அறியாமையில்ை, தன் நாட்டின் மீது படை

5%

56