பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகர்த்து விடு வ தா. க - அமைந்துவிடவே, செயலிழிந்து அமர்ந்து விட்டாள் அவள்.

பாண்மகள் நிலைகுலைந்து போளுள்; ஆனால் அவளுடன் வந்த பாண்மகன் அதிர்ச்சியுற்ருனில்லை. மாருக, அது கேட்டதன் மூலம், எந்தெந்த பருவத்தில் எதைஎதைச் செய்ய வேண்டுமோ, அதைத் தவருமல் செய்கிருன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பது உறுதியாகவே, அவன் மகிழ்ந்து கூத்தாடலாயினன். எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிட்ட ஏக்கத்தில், தான்் செயலிழந்து கிடக்கும்போது பாண்மகள் மகிழ்ந்து கூத்தாடக்கண்டு பாணனைச் சினந்து நோக்கினுள் பாண்மகள்

பாண் மகளின் முகத்தோற்றத்தின் மூலம், அவள் அகத்தே நிழலாடும் எண்ண அலைகளை உணர்ந்து கொண்ட பாண்மகன், பாண்மகளே சேரலாதன், நறவு எனும் ஊரில், இளமகளிர் ஆடல் பாடல்களில் ஈர்ப்புண்டு, இன்புற்றுக் கிடக்கின்ருன் என்ருலும், அந்நிலையிலும், அவன், தன்பால் வந்து நிற்கும் இரவலர்க்குப் பரிசில் பொருள்களை வாரி வாரி வீசுவன்; அவன் அத்தகையன், என்பதை, உன் கண்களா. லேயே காண, இப்போதே ஆங்குச் செல்வோம்; இன்னே எழுக என்றனன். இன்னே எழுக' எனப், பாணன் விரைவு படுத்திலுைம், போர் முயற்சியோ பொருளிட்டும் முயற்சியோ இல்லாமல், இன்பத்துறையில் எளியளுகிவிட்ட அவன்பால், கொடுப்பதற்கு, வளம் இருக்கவா போகிறது? அஃது இல்லா அவன்பால் செல்வது வீளும் என்ற எண்ணம் இடைபுகுந்து த டு க் க வே. பாண்மகள் இருக்கைவிட்டு எழுந்தாள் அல்லள். . . - .

பாண்மகளின் இவ்வுள்ளத்து உணர்வை உணர்ந்து கொண்ட பாண்மகன், சேரலாதன்.நறவு அடைந்து நங்கையர்

87

87