பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

புதிய

இவருக்கு வந்து வாய்ப்பது என்றால், எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. களத்துமேட்டுக்கு ஓடுவதும், முழங்காலளவு சேற்றில் இறங்கி நடப்பதும், மரத்தில் ஏறிக் காய் பறிப்பதும், மடுவில் நீந்திக் குளிப்பதுமாக இருந்து வந்த என்னை, இங்கே, காலிலே ஜான் உயரத்தில் பூட்சும், கையிலே ஒரு அலங்காரப் பையும், கண்ணுக்குத் தங்கக் கம்பி போட்ட கண்ணாடியும் போட்டுக் கொண்டு, முக்கால் சிரிப்பும், கால் பேச்சும் கலந்தளித்துவரும் நாகரிகப் பெண்களின் நடுவில் கொண்டு வந்து ஏன் நிறுத்தினார் என்றே தெரியவில்லை. அவர் மேஜை மீது அடுக்கடுக்காகப் புத்தகங்கள்—ஒரு வரியும் எனக்குப் புரியாது...ஆனால் என்னிடம் அவர் காட்டும் அன்பைக் கண்டாலோ, அவருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போலத் தோன்றுகிறது. கதை ஒன்று கேட்டிருக்கிறேன், சின்ன வயசில். வேண்டுமென்றே ஒரு ராஜா, தன் நாட்டிலே இருந்த பிச்சைக்காரனுக்கு, ஒருநாள் ராஜா வேலை கொடுத்து, அதை அவன் எப்படி எப்படி உபயோகப்படுத்துகிறான் என்று வேடிக்கை பார்த்தானாம்—அதுபோல இது ஒரு வேடிக்கையோ, எவ்னவோ என்று எண்ணிக் கொண்டு, அதற்கு ஏற்றபடியே நடந்து கொண்டு வந்தாள்.

கிராமத்துக் கட்டழகியின் கவர்ச்சி, நகரத்துச் சூழ்நிலையில் மெள்ள மெள்ளத் தானாகவே மாறிக்கொண்டு வரலாயிற்று. ஒருவரும் கவனிக்கக்கூட முடியவில்லை. பசுமைக்குப் பக்கத்திலே இந்த 'இளமை' உலாவிக் கொண்டிருந்த காட்சிக்கும், பங்களாவில் ஆள் நடமாட்டம் இல்லமல், அந்தஸ்தைக் கட்டும் பொருள்களுக்கும் மத்தியில் செல்லி இருந்த காட்சிக்கும் வித்தியாசம் கணப்பட்டது. அதைக் கவனித்தறிய வடிவேலனால் முதலிலே முடியாமற்போனதற்குக் காரணம், அவன் அவளிடம் செக்கிக் கிடந்ததுதான்! மடுவிலே இறங்கி, மகிழ்ச்சியுடன் நீந்தி விளையாடுவாள், கிராமத்தில்; வேறு பெண்களும் குளிக்க வருவார்கள் - விளையாட்டு பலமாகிவிடும்; தன்ணீரை வாரி வாரி இறைத்துக் கொள்வார்கள். யார் முதலிலே வெளியே தலையைத்