பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழை

149

இந்த வேலையையும் இழந்துவிட்டான்! வேறு ஊருக்கே போய்விட்டான்! எவன் இந்தத் 'தூங்கு மூஞ்சி'யை நம்பி வேலை கொடுப்பான்? என்னமோ பாவம், ஏழையாக இருக்கிறானே என்று இரக்கம் காட்டி வேலை கொடுத்தோம், கொஞ்சமாவது சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை இருந்தால்தானே!—என்று பேசிக்கொள்கின்றனர், மூட்டை முடிச்சுக்களுடன் வேற்றுார் கிளம்பும் எல்லப்பன் பற்றி தொழிலகத்தில்.

'ஏழை' எல்லப்பன் வேறு ஊரில், வேறு வேலையில் அமர்ந்து கொள்ளச் செல்கிறான்—சீவல் பாக்குக் கம்பெனிக்கு விளம்பர அலுவலாளராக!

சீவல் பாக்குக் கம்பெனி சிவராமன், பெரிய அளவில் அபின் கள்ளக்கடத்தல் செய்து வருகிறாள் என்பது தகவல்! கண்டறியச் செல்கிறான் எல்லப்பன், ஏழைக் கோலத்தில்!