இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மகன்
77
"எங்கே போனால் என்ன? வழக்கின் முடிவு எதுவானால் என்ன? நான் செய்த குற்றத்துக்கான தண்டனையை நான் அனுபவித்து விட்டேன். வண்டிக்காரன் மகன் என்றாலும் வாழ முடியும்—பளபளப்பும் போலி மரியாதையும் கிடைக்காமலிருக்கலாம்—நாணயமாக வாழ முடியும் இந்தப் பரந்த உலகத்தில் என்ற சாதாரண உண்மையை உணர முடியாதிருந்தேன். பாடம் படித்துக் கொண்டேன்; யாரும் கொடுத்திராத கட்டணம் செலுத்தி...என் தகப்பனாரின் உயிரைக் கொடுத்து.
பக்கத்திலே கோகிலா வந்து நின்றாள்.
நார்மன் சொக்கலிங்கத்தைப் பார்த்தார்.
"என் துணைவியார்!" என்று பெருமிதத்துடன் சொக்கலிங்கம் கூறினான்.
★