பொலிவு
93
தெருத் தெருவாப்போய் வித்தானுகளே, இந்தக் கழகத்துக்காரனுங்க...கௌரவமா போயிடுச்சி...மக்களோட கஷ்டத்தை உணர்ந்த மகாராஜனுகன்னு ஏழை எளியவங்க வரவேத்தானுக...இவர் என்னடான்னா, கிண்டல் பேசறாரு, கிண்டல்! கூடையைத் தூக்கினதே இல்லை...பொறக்கறப்பவே ஓட்டுப் பொட்டியோட பொறந்தவரு..."
"இதோ பாருங்க...இந்த மந்திரி இப்படித்தான் எப்பவும் வம்பும் தும்பும் பேசறவரு..இவர் போலவா மத்தவங்க?...போகாதீங்க...இருங்க...மத்த மந்திரிகள் பேசறதைக் கேளுங்க..."
"ஏன், இந்த ஒரு மந்திரி அபிஷேகம் பண்ணினது போதாது, மத்தவர்களோட அர்ச்சனையையும் கேட்டுட்டுப் போகலாம் என்கிறாயா? அடே அப்பா! கொடிமரம், போதும்டா எங்களுக்கு. வேணுங்கிறது கிடைச்சுப் போச்சு. உனக்கு வேணுங்கிறதையும் நாங்க கொடுத்தாச்சி; எங்களை இத்தோடு விட்டுடு...மானமாவது தக்கட்டும்."
கமிட்டியினர் கடுங்கோபத்துடன் செல்வது கண்டு கொடிமரத்தான் பயந்து போனான்—திரும்பி அதே கிராமத்திலே நடமாடவேண்டுமே!
வேலப்பனுக்குத்தான் இதனால் அதிகச் செலவு; கிழங்கு 'கால்வாசி' விலைக்குக் கூடப் போகலில்லை. 'முட்டுவழி' கட்டி வரவில்லை. கிழங்குப் பிரச்னையைத் தீர்த்து வைக்க எடுத்துக் கொண்ட முயற்சியால் கடன் வேறு; வேலப்பன் கலியாணத்தைப் பற்றிய எண்ணத்தையே விரட்டி அடித்தான்; செல்லாயியால் கண்ணீர் சுரப்பதைத் தடுக்க முடியவில்லை. கன்னம் அந்த முத்துக்களை தாங்கிக்கொள்ள மனமின்றி, நெஞ்சிலிருந்து கிளம்பியவை அங்கேயே போய்ச் சேரட்டும் என்று அனுப்பிவிட்டது.
"வேலப்பா! ஏண்டாப்பா! இதுக்கெல்லாமா மனசைத் தளர விட்டுவிடறது? இதுவரையிலே நான் இதுபோல எத்தனை கஷ்டத்தைத் தாங்கிகிட்டேன். காஞ்சிருக்கும், மழையாப் பொழிஞ்சி அழிச்சி இருக்கும், மாடுகண்ணு 'கோமாரி'-