பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வனதேவியின் மைந்தர்கள்


“இதுவும் ஒருவிதத்தில் சுதாவுக்கு நல்ல பேறாக வாய்த்திருக்கிறது.”

பூமை எதுவும் பேசவில்லை.

“எப்போது பார்த்தாலும் என்னம்மா யோசனை? பேசாமல் நான் ராணிமாதாவுடன் உட்கார்ந்திருக்கலாம்...”

சிணுங்கலும் சீண்டலுமாக அவள் தொடர, பயணத்தின் இறுதிக்கட்டம் வரும்போது, முற்பகல் நேரமாகிறது.

அவர்களை வரவேற்க வேடுவப் பெண்கள் தேனும் மீனும் காணிக்கைப் பொருட்களாகக் கொண்டு வருகிறார்கள். காட்டுப் புற்களால் வேயப்பட்ட தாழ்வரைகளில் அவர்கள் அமர இருக்கைகள் தயாராக இருக்கின்றன. அரசகுலப் பெண்கள் அமரவும் இளைப்பாறவும், விளையாடி மகிழவும் ஆடல் பாடல்களில் ஈடுபடவும், கானகம் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில்தான்கோமுகம் போல் செதுக்கப்பட்ட பாறை வளைவில் இருந்து ஊற்று வெளிப்படுகிறது.நீர் இதமான, மிதமாக சூட்டுடன் பெருகி வந்து அருகிலுள்ள தாமரை வடிவிலான செய்குளத்தை நிறைக்கிறது.

சற்று எட்ட பெரும் விழுதுகளை ஊன்றிக் கொண்டு கணக்கிடமுடியாத வயதென்று இயம்பிக் கொண்டு ஒர் ஆலமரம் இருக்கிறது.

அந்த மரத்தில் இருந்து வரும் பறவைக் கூச்சல் பூமிஜாவைப் பரவசம் கொள்ள செய்கிறது. ஒரு கிளிக்கூட்டம் சிவ்வென்று பறந்து செல்கிறது.

“எத்தனை பெரிய மரம்? இது போன்ற மரங்கள் நான் கண்டதில்லை”

“நீங்கள் சுற்றி வந்த தண்டகாரணியத்தில் கூடவா?”

“இல்லை...”

“அதோ அதுதான் நீலகண்டப் பறவை. கழுத்து நீலமாக இருக்கிறது, பார்!”