பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இமயமும் குமரியும்

67


முத்தி விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!
(புறம் 2)

என முடிக்கின்றார் அவர் எனவே, அந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழருக்கு இமயம் பொதியமலை ஒத்தே உரியதாகவும் சிறந்ததாகவும் விளங்கிற்று என்பது தெளிவு.

இமயத்தை எல்லையாகக் கொண்ட காரணத்தால்

"இமயவரம்பன்' என்ற பெயரைப் பெற்றனர் என்பது அக்கால அவ்வரசர்களுக்குப் பொருந்துவதாகும். வட நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் ஆண்ட காலத்தில் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் தொடர்பு இருந்துவந்தது எனக் காண்கின்றோம். அவர் காலத்துக்கு முன்னும் சந்திரகுப்தமெளரியர், நந்தர் காலத்திலும் தமிழ்நாட்டுக்கும் வடநாட்டுக்கும் தொடர்பு இருந்ததை அறிகின்றோம். எனவே, அசோகர் காலத்துக்கு முன்னோ பின்னோ, தமிழ்நாட்டு அரச மரபினருள் சிலர் ஒருவர்பின் ஒருவராக இமயம் வரை படை எடுத்துச் சென்று வெற்றி கண்டு இமயத்தில் இலச்சினையைப் பொறித்து வந்தனர் என்பது அறிய முடிகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் இமயத்தையும் குமரியையும் எல்லை யாகக் கொண்டார்கள் என்பதை ,

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
வெற்றமொடு வெறுத்துஒழுகிய
கொற்றவர்தம் கோனாகுவை'
(மதுரை.70-74)

என மாங்குடி மருதனாரும்,

‘தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை,
(புறம். 17: 1,2)

எனக் குறுங்கோழியூர் கிழாரும்,