பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
யாழ் பிறந்தது


எண்ணோடு எழுத்தோடு இயல் ஐந்தென்றார்
ஏழு நரம்பெடுத்து பண்ணென்றார்
நரம்பைச் சுரமென்று சொல்லுவார் புதுமரபு
ஒளியை இனம்பிரிந்து ஏழுநிறங்கொண்டார்
ஒலியை வகைப்படுத்தி ஏழுசுரம் என்றார்
பண்ணும் திறமுமாக இன்று பயிலுவது
ஒன்பது குறைய ஒரு பன்னீராயிரம்
இத்தனை வளர்ச்சிக்கும் வித்தாக ஆதியில்
வேட்டுவன் வில்லிழுத்தான் நாணதிர்ந்த ஒலி
உள்ளத்தைத் தொட்டது உணர்வை வருடிற்று
இசைக்குலத்தின் முதல் யாழ்பிறந்தது
சீரியாழ் பேரியாழ் சகோட யாழுடன்
செங்கோடும் மகரமும் யாழாயின
ஆதியாழுக்கு ஆயிரம் நரம்பு தொடுத்தான்
காழ்வரை நில்லா கடிங்களிற்று ஒறுத்தலை
யாழ் வரை நிறுத்தினான் மலைவளர் வேட்டுவன்
குறிஞ்சி நிலத்துக் கொடிச்சியர் பாட்டுக்கு
மறம்புகல் மழகளிறும் உறங்கிற்று என்பார்
எரினப் பிறப்பான அசுனமா என்பது
இசையறி பறவை யாழிசைத்துப் பிடித்தார்
மேய்ந்து திரிந்த மாடுங்கன்றும்
ஆயன்குழலுக்குத் தொடர்ந்து வரும்
ஆறலைகள்வரும் பாலைப் பண்ணுக்கு உருகினார்
அவர் கொடுவாளும் நெடுவேலும் கைநழுவும்

20