பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இராவணலங்கை

தஞ்சைநாட்டு கோடிக்கரைக்கும்
இலங்கை தலை மன்னார் துரைக்கும்
இடையில் கிடந்ததொரு நெடுந்தீவே
தென்னிலங்கை என்ற ராவண லங்கை
திண்டிவனம் தெற்காக ஏழுகல் அளவில்
கீழ் மாவிலங்கை என்றதொரு மூதூர்
சிற்ப வளத்தோடு சிறக்கின்றது இன்றும்
பாலாற்று வெளிமுதல் குசத்தலை பொன்முகலி
வடபெண்ணை வரையுள்ள அருவா வடதலையை
மாவிலங்கை என்பதே வரலாற்று மரபு
மாவிலங்கையின் மறு பதிப்பாக
தெற்கில் அமைந்ததே தென்னிலங்கை
தென் திசையாண்ட தென்னவரின் வழித்தோன்றல்
அரக்கன் எனப்பட்ட இராக்கதிர் கோமான்
அரக்கன் என்றது அருக்கனின் திரிபே
அரும் பொருள் உணராத ஆரியம் பழித்தது
இருளில் ஒளி உமிழும் விழியுடையான்
இராக்கதிர் கோமான் என்பதே அவன் பெருமை
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தான்
தலமுதலூழியில் வானவர் தருக்கற
புலமகளாளர் புரிநரம்பாயிரம்
வலி பெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்

46