பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வடக்கும் தெற்கும்

தென்னகத்து பேராற்றில் ஒன்று கிருஷ்ணை
அதன்கடல் முகப்பட்டினம் அமராவதி என்ப
அதன் மன்னவரில் ஒருவன் இந்திரன்
கலியரசர் என்று சரித்திரம் சாற்றிய
களப்பிரருக்கு இவனே முதல்வன்
இன்றும் இந்திரகுலம் என்று
பெருமைப்படும் வீர மரபினர் தெற்கிலுண்டு
பாண்டவ குந்தி வனவாசம் வந்தபோது
பார்த்தனைப் பெற்றது இந்த பார்த்திபனுக்கே
வேள்விக்குரிய வேதபுரத்து இந்திரன்
இவனுக்கு பகைவன் அமரவதியைக் கைப்பற்றினான்
ஆரூரில் தன் மகன்மீது தேரூர்ந்த
மனுமுறை கண்ட மன்னவனுக்கு மகன்
பிரமனை சிறைப் பிடித்த வலிய படையாளி
வீரபாகுவின் மருமான் என்ப
ஆரூரில் அரசிருந்த இவனே முசுகுந்தன்
அமராவதிப் பட்டினத்து உரிமை வேந்தன்
இந்திரனுக்காக வேதிய புரந்தரனை
வென்று வாகனமாய்க் கொண்டு வந்த
வரலாறுமுண்டு, வெற்றி கொண்டு மீட்ட
அமராவதியின் பேரால் கரூரும்
ஆகப் பொருனையும் அமராவதி ஆனதுண்டு
குந்தி மைந்தன் என்று கூறும் பார்த்தனும்

51