பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆழ்ந்த நுண்ணறிவும் அகன்ற நூலறிவும்
கொண்ட சான்றோர்கள் கருத்து இதுவே
குமரியாறும் குமுறும் கடலும்
கூறும் உண்மைகளைக் கூறினேன்
தெற்கில் தமிழ் நிலத்தை கடலலை மாய்த்தது
வடக்கில் தமிழ்க் குலத்தை ஆரியக்கலை மாய்த்தது
இடையில் திரிந்து போனவர் போக
தண்பொழில் வரைப்பில் தலை நிமிர்ந்து
தனக்கென்று வரன்முறை வகுத்துக் கொண்ட
தலை முறையே தலைச்சங்கப் பரம்பரை
முன்னைமொழியும் மரபும் இன்னும்
கட்டுக் குலையாமல் கன்னித் தன்மையுடன்
வருகின்ற வரலாற்றுப் பழங்குடிக்கு
இதிகாச புராண இலக்கியங்களிலிருந்து
கற்பனை வர்ணனைகளை களைந்துவிட்டு
தெரியவந்த உண்மைகளைத் தொகுத்து
கண்டதும் கேட்டதும் கற்றதும் கலந்து
என் கருத்துக்கு சரியன்று பட்டபடிக்கு
தலைச்சங்க நாட்களைத் தந்திருக்கின்றேன்
என் தாய் திருநாட்டிக்கும் தமிழுக்கும் வணக்கம்
எனக்கு முன்னம் எழுதினார்க்கு நன்றி
இன்னும் பின்னால் எழுதுவார்க்கு வாழ்த்து
அவர்கள் சிந்தனையைத் தூண்டுவதற்கு
ஏ. கே. வேலன் எழுத்து ஒரு கைவிளக்கு


★★★