பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரி நான் எழுதுவதுபற்றி எனக்கே எழுதுவதில் என்ன பயன்? எனலாம். தாங்கள் தங்களையறியாது செய்துவரும் இந்தத் தொண்டினை முதற்கண் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். பின்னர் எழுதுவேன். இதற்கிடையே தங்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களைப் பார்த்த விபரம் கேட்க்க விருப்பம்

முன்றில் கருத்தரங்களில் தங்கள் கடிதங்கள் பற்றி திரு நசனும் திரு.த.க.துறைவனும் என்னிடம் பேச்சிற்சிடையே குறிப்பிட்டனர்.

அமைதியாக, இப்படி தாங்கள் எழுதியிருக்கும் கடிதம் ஆயிரக்கணக்கில் இருக்கும். இதற்கு தபாற்செலவு என எவ்வளவோ செலவழித்து இருப்பீர்கள்: எண்ணிலடங்கா கருத்துப் பரிமாற்றங்கள், விமர்சனங்கள், துலறிமுகங்கள், நண்பர்கள் அறிமுகங்கள். மனிதகுண நலன்கள். எண்ணிறந்த நிகழ்ச்சிப் பரிமாற்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலே நிறைய்ய உண்மைகளை அந்தக் கடிதங்கள் ஏந்திச் சென்றிருக்கும். எல்லோரும் தங்கள் கடிதத்தை பொக்கிஷமாகவே போத்துவர்.

இன்று தங்கள் கடிதங்கள் தாங்கள் எனக்கு எழுதிய பல கடிதங்கள்- தமை படிக்கும்போது. எனக்கு தங்கள் கடிதங்கள் என்னுள் ஏற்படுத்திய சிந்தனை, உணர்வு கிளரப்படுதல், மகிழ்ச்சி, இன்னபலவற்றிற்கும் மேல் ஏற்பட்டது வியப்பு:

பிரியங்களுடன் நாகரத்னம்