பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசகர்களுக்கு தா- பற்றி அறிய உதவும் என்று கருதுகிறேன். பலரும் பிரதர்ஸ் காரமளலாவ் பற்றி ஆழ்ந்த சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார்கள். க்ரைம் அன்ட் பனிஷ்மெண்ட், இடியட் நாவல்கள் பற்றி அவற்றின் சிறப்பான பாத்திரங்கள் - மனப்போாாட்டம் கதை விஷயம் பற்றி) தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடியவாறு யாரும் எழுதவில்லை.

அன்பு

3f, జి.

சென்னை.

  1. 9-10-97

அருமை நண்ப, வணக்கம். உங்கள் 12-10-91 கடிதம். சந்தோஷம்.

நீங்கள் எழுதவில்லை என்றாலும், நான் அவ்வப்போது கடிதம் எழுதியிருந்திருக்கலாம். நானும் எழுதவில்லை. உண்மையிலேயே வேலைகள் மிக அதிகம். சமாளிக்க முடியாத அளவு வேலைகள். பலவிதமானவை. அவற்றினுண்டும் புதிய புதிய புத்தகங்களை படிக்க முடிந்திருப்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். அந்தப் புத்தகங்கள் பற்றி உங்களுக்கு எழுதியிருக்கலாம். சரி. போகிறது.

தாஸ்தயேவ்ஸ்கியின் 'கரமசவ் நாவலை வெளியிடுவதில் ஆர்வமாக இருப்பது பாராட்டுதலுக்கு உரியது. 'கல்குதிரையை பொறுப்பேற்று, தொடர்ந்து நடத்துவதும் நல்ல காரியம் தான்.

என் எழுத்துக்களை இப்போது புத்தகமான வெளியிட இயலாதிருப்பதுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை. இத்தனை காலம் காத்திருந்தவை இனியும் காத்திருப்பதனால் எதுவும் கெட்டுவிடாது.

மேலும், நான் 'தீபம் இதழில் எழுதிய கட்டுரைத் தொடர் 'தமிழில் சிறுபத்திரிகைகள் ஐந்திணைப் பதிப்பகம் வெளியீடாக அச்சாகிவிட்டது. புத்தகமாக நவம்பரில் காண முடியும் என தம்புகிறேன். 'தீபம்’ இதழ்களில் அவ்வப்போதுடவெளியான 3 குறுநாவல்கள் மன்னிக்கத் தெரியாதவர் என்ற தொகுப்பாகவும், 12 கதைகள் அருமையான துனை என்ற தொகுப்பாகவும் CLS ஆல் பதிப்பிக்கப்படுகின்றன. இவை நவம்பரில் வந்துவிடும்.

இவை சந்தோஷமான சமாச்சாரங்கள் தானே! வேர்கள்