பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் எழுதியுள்ள பல நூறு சிறுகதைகளில் நாற்பத்தொரு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மனிதர்களின் விதம் விதமான உணர்ச்சி நாடகங்களையும், உளவியல் போராட்டங்களையும் எடுத்துக் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்கள் இவை. வாழ்க்கையில் காணப்படுகிற முரண்பாடுகளையும், அங்கதங்களையும், விசித்திரத் தன்மைகளையும் இவை சுவையோடு பதிவு செய்துள்ளன.

ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இச்சிறுகதைகளைத் தொகுத்து, அழகான புத்தகமாக வெளியிடும் ராஜராஜன் பதிப்பகத்துக்கும், நண்பர் மா. நந்தன் அவர்களுக்கும் என் நன்றி உரியது.

இக்கதைகளை வெவ்வேறு காலங்களில் வெளியிட்ட பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கும் நன்றி.