பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்க ண்ணன் 228 நேர்ந்த உறவுகள்; பக்கத்து வீட்டில் பழுத்துக் கனிந்து தங் கள் கையில் வந்து விழுந்த உணர்ச்சிக் க(ன்)ணிகள் பற்றி எல் லாம் அலுப்பில்லாமல் சொன்னார்கள். சிலர் பேய்களுடன் நேரிட்ட பேட்டி; பாம்பு அல்லது துஷ்ட மிருகத்தை எதிர்த்துக் கொன்றது; அபூர்வமாகக் கிடைத்த வாட்ச் அல்லது நகை அல்லது பர்ஸ்-இப்படி சந் தர்ப்பச் சூழ்நிலைகளோடு விவரித்தார்கள். அதிர்ஷ்டசாலி கள்! -நம்ம வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? பிஞ்சு போன முறத்தாலே அதை வெளும்பச் சாத்த அறுந்த பழைய செருப் ாலே அதன் மூஞ்சியிலே போட! இப்படி எல்லாம் எடுத்துச் சால்வதுக்கு ஒரு அனுபவத்துக்குக் கூட வழி செய்யலியே அது! சுயம்புவின் உள்ளம் காளவாயாய்க் கொதிக்கும். புழுங் கும். புகையும். ஒரு அனுபவம் நேரக்கூடாது? ஒரே ஒரு அனுபவம்! புதுமையானதாய்! சகஜமாக எதிர்ப்பட முடியாததாய்! நிகழ்ந்தால் என்ன? இதுவே அவனது நித்திய, நிரந்தர ஏக்கமாக அமைந்து அவனை அலைக்கழித்தது. சுயம்புலிங்கத்துக்கு உதவி புரிய காலம் மனம் கொண் டது போலும்! அவனது ஊரிலிருந்து ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள ரெண்டுங்கெட்டான் ஊருக்கு சுயம்பு போக வேண்டி யதாயிற்று. அங்கே வசித்த உறவினர் அவனை வந்து போகும்படி அழைத்திருந்தார். அவன் போனபோது அவர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்று தெரியவுமில்லை. அவன் சென்றது பிற்பகல் மூன்று மணிக்கு. சரி, ஐந்து மணி சுமாருக்கு வந்து பார்க்கலாமே என்று எண்ணி அவன்