பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

பலம் பொருந்திய நிலையில் பொருதி விளையாடி பாராடி பாரையே பதறடித்து, எத்திக்குச் சென்றாலும் எதிர்ப்பார் இன்றி வெற்றித் திருநாடாக விளங்கிய பாரதம், 1973ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று இரண்டாம் நிலையே பெற்றது.

1975ம் ஆண்டில் உலகக் கோப்பைக்கான போட்டியில்பாரதம் பாகிஸ்தானை வென்று, மீண்டும் பழம் புகழைப் புதுப்பித்துக்கொண்டது. என்றாலும், இடையிலே நாம் தாழ்ந்தோம். வீழ்ந்தோம். ஏன்?

நாம் நம் நிலையில், சீரிய செயல் முறையில் நாம் இன்னும் செயல்பட முடியவில்லை. புரிந்த நன்கு வழிகளுக்கேற்ப நாம் புகழ் தரும் பாதையில் போக வில்லையே என்று ஆட்ட வல்லுநர்கள் எல்லோரும் அறிவுரை கூறுகின்றனர்.

அறிவுரையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இழந்த புகழை மீட்டுக் கொண்டதுபோல், இனிமேல் எல்லா வெற்றியையும் போட்டிகளில் பெற, இளைஞர்கள் வளைகோல் பந்தாட்டத்தில் போதிய அக்கரையும் ஆர்வமும் கொள்ள வேண்டும்.

இளைஞர்களின் வளமான விளையாட்டிற்கு ஏற்ற பல ஆட்ட நுணுக்கங்களை, எளிய, இனிய முறையில் கற்கும் வண்ணம், இங்கே பல வழிகள் சுவையாகத் தரப்பட்டுள்ளன.

அவற்றை விரும்பி ஏற்றுக் கொண்டு, அரும்பி வரும் ஆர்வத்திற்கு ஆன்ற துணையாக, இனிவரும்