பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


  • இதற்குப் பூரண மனக்கட்டுப்பாடும், உடல்

கட்டுப்பாடான வேகமும் நிறைய வேண்டும். ஆகவே: ஆட்டநேரத்தில், எதிர் ஆட்டக்காரர்கள் எவ்வாறு ஆடுகின்றார்கள் என்பதை அறிந்து, தம் பாங்கர்கள் எங்கெங்கே நிற்கின்றர்கள் என்பதையும் உணர்ந்து, தேவைக்கேற்றவாறு மேலே கூறிய மூன்று வழிகளிலும் பந்தை அடித்தாடி வழங்கும் விதத்திலும் இதத்திலும் தான் பந்து முன்னேறுகிறது. பாங்கரும் முன்னேறுகின்றர். வெற்றி வாய்ப்பும் வீறுடன் கண்முன்னே காட்சியளிக்கிறது என்பதனால், ஆட்டக்காரர்கள் மேலே கூறிய முறைகளில் நன்கு தேர்ச்சியும் தெளிவும் பெற வேண்டுவது மிக முக்கியமாகும். 4. பந்தை வழங்கும் தரமும் திறமும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் பந்தினைப் பத்திரமாகத் தன் குழுவினருக்கும், பாங்கருக்கும் பாங்காகக் கொடுக்கவும், எதிரிவசம் சேர்ந்துவிடாமல் இலாவகமாக ஏற்ற வழியில் இயைபுறத் தந்து ஆடுவதையே பந்தை வழங்குதல் என்கிறோம். அந்தத் திறத்தையும் அருமையாக வழங்கிவிடும் தரத்தையும், அனுபவத்தின் முதிர்ச்சியாலேயே அற்புதமாகப் பெறமுடியும். பந்து தன்வசம் உள்ளது. என்று எப்படி எப்பொழுதும் கூறமுடியும்?ஓடுகிற பந்தை அல்லது தன் பக்கம் நோக்கி ஓடி வருகிற பந்தை, தடுமாற்றமில்லாமல் நிலையாக நின்று விடுவதுபோலத் தடுத்து நிறுத்தி வைத்தல் (Point). பிறகு, எந்தப் பக்கம் யாருக்கு எவ்வாறு வழங்க