பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

实 வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 8● அவன் கேட்டதைக் கொடுத்தல் கூடாது என்னபயனாயின் எதனைக் கேட்டாலும் கொடுப்பது வள்ளல்கட்கு உரிய 'தலால் அதுவும் அங்கீகரிக்கப்படமாட்டாது' என்றான். தனது உயிர் போவதாயினும், கொடுத்தல் நல்லது. இரத்தல் கூடாது என்பது இதன் கருத்து இந்நீதியை இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (1061" ற திருக்குறளைக் கொண்டு அறியலாம். நல்லது கூறுவார் 8.தும் உடன் கூறினார். "நல்லாறு எனினும் கொளல் தீது, மேலுலகம் இல்லெனிதும் ஈதலே நன்று 222 என்ற குறள் இங்கு பொதிந்திருப்பது கண்டு மகிழத்தக்கது. தோடர்ந்து பேகம் இன்னொரு பாடல்: எடுத்தொருவ ருக்கொருவர் ஈவதனின் முன்னம் தடுப்பது தினக்கழகி தோதகவில் வெள்ளி கெடுப்பது விலக்குகொடி யோய்உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய். " என்பதால் கொடுப்பதை விலக்குபவனது சுற்றம் உடுப்பதும் உண்டதும் இன்றிக்கெடும். எனவே அவன் கெடுதல் சொல்லட்டடாமலே அருத்த பத்தி பிரமாணத்தால் கொள்ளப்படும். பிறர்பேறு பொறாமை, தன் பேற்றையே யன்றித் தன் சுற்றத்தின் பேற்றினையும் இழப்பிக்கும் என்பதாம். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும் (166) " என்ற குறட்பாவின் கருத்துப் பொதிந்துள்ளது. இப்பாடலில். ஈவதனின் முன்னம் என்றது தடுத்தலின் விரைவு தோன்ற நின்றது. ੁਨ਼” 墨,孵銳器·露 శ్లో 18. கம்பரா. பால. வேள்விப் படலம்.38 i&. அழுக்காதாமை 8