பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கண்டேன் என் கண்கள் குளிர

ஆனந்தமான அதிகாலை நேரம்!

இதமான குளிர்காற்று, பதமாக வீசி புத்துணர்ச்சி ஊட்டுகின்ற உற்சாகமான நேரம் அது!

பொதுவாக நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரம். வள்ளுவரைப் பற்றி எனக்குள்ளே ஆயிர் மாயிரம் சிந்தனைகள். அவர் கொடுத்துச் சென்ற குறட்பாக்கள் பற்றிக் குரல்கொடுத்த ஆயிரமாயிரம் அறிஞர்களின் கருத்துக்கள் நெஞ்சில் எக்காளம் இடுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டு காலமாக அந்த இணையற்றதோர் தெய்வாம்சம் நிறைந்த 1330

---