வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் -
வள்ளுவர் பேசுவதாக உள்ள கருத்துக்கள் எல்லாம் எனது கருத்துக்களே.
ஆன்றோர்கள், குறளின்மேல் நீங்காக் காதல் கொண்டவர்கள். எனது கருத்துக்களில் தவறு காண்பாராயின், தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
தவறான கருத்துக்கள் என்று தக்க முறையில் கூறினால், திருத்திக் கொள்ள நான் தயங்க மாட்டேன். நன்றியுடன் ஏற்றுக் கொள்வேன்.
என்னுள்ளே வள்ளுவர் குடிகொண்டு வாழ் கிறார். இருபது ஆண்டுகளாக, திருக்குறளை ஆய்ந்து, இப்படி ஒரு நூலை எழுதவேண்டுமென்ற எனது ஆசை தான் நிறைவேறியிருக்கிறது. வள்ளுவரைத் தொழுது செய்கிற பூசை முடிய வில்லை. அது முடியாது. வாழ்நாள் வரையிலும் தொடரும்.
இப்படி ஒரு நூலை எழுதுமாறு என்னை, இயக்கி, முயற்சிக்க வைத்து, முழுமை காணச் செய்த இறைவனுக்குரிய நிழலடிகளைத் தொழு கிறேன். அவரது கருணைப் பெருங்கொடிையை கண்டு, உண்டு, மகிழ்கிறேன். -
வள்ளுவர் பற்றிய வரலாறு தொடர்கிறது.