24 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இலக்கிய 57 என்றெல்லாம் கூறினார்கள் பல ஆராய்ச்சியாளர்கள். - o
திருக்குறளிலே ஆடை அணிகள்: திருக் குறளிலே இயற்கை என்றெல்லாம் துருவித் துருவி ஆராய்ந்து, நூல்கள் பல எழுதித்தள்ளினர் பல பேராசிரியர்கள்.
இந்த நூலிலே எல்லாம் இருக்கிறது. வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாக் கருத்துக்களும் வகையுடன் வளமாகக் கூறப்பட்டிருக்கின்றன என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து, எதுவுமே இல்லைதான். -
ஆனால் விளையாட்டுத் துறைக்கென்று இலக்கிய நூல்களை எழுதிக் கொண்டிருக்கும். எனககு ஒா ஐயம. . :
வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாமே குறளில், குறிக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு வாழ்க்கை நூல் என்றால், இதில் ஏன் விளையாட்டுக்கள் பற்றிய குறிப்புக்கள் இடம் பெறவில்லை ?
இந்த ஒரு வினா, நான் தமிழில் நூல்கள் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே புடைத் தெழுந்துகொண்டு, எனக்குள் புதைந்தும், மறைந் தும் எழுந்தும் என் மனதிற்குள்ளே சதிராடிக் கொண்டு கிடந்தது. -**