பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிந்து பாடும் சிந்தனைகள்

நான் வந்தபோது நீங்கள், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தீர்களே! அதைப்பற்றி நான் அறிந்து கொள்ளலாமா! என்று வள்ளுவர் எங்களிடையே நிலவிய அமைதியைக் கலைத்தார்.

நீங்கள் எழுதிய நிலையான களஞ்சியமாக விளங்கும் திருக்குறளைப் பற்றி, ஒரு குறிப்பைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதை உங்களிடம் உரைத்தால், எனக்கு விளக்கம் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன் என்ற எனது பதிலைக் கூறினேன்.

சொல்லலாம் என்றார் அவர்.

‘அறம்விரும்புவோர்க்கு இது பேர் அறநூல். அரசியல் விரும்புவார்க்கு இது அரசியல் நூல்.