பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 289

அவர்களை காலம் கண்டிக்கும். தண்டிக்கும் என்றார் வள்ளுவர். உண்மை தான். அப்படித் தான் எங்களுக்கு நடிந்து வருகிறது என்று வாய் விட்டுக் கத்தி விட்டேன்.

நீங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டிர் கள் என்றார் வள்ளுவர்.

தகுதியையும், திறமைகளையும், செழித் தோங்கச் செய்யும் விளையாட்டுத் துறையில், தவறுகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு, தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருக்கின்றவர்கள், என்று நீங்குகின்றார்களோ, அல்லது நீக்கப்படு கின்றார்களோ, அன்று தான், விளையாட்டுத் துறையும் இந்த நாட்டில் வளரும். விளையாட்டு வீரர்களின் ஆற்றலும் மிளிரும் என்று நான் கூறியதை உண்மைதான் என்றார்.

பேசியபடியே வீட்டிற்கு வந்து விட்டிோம்.