பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 5 I

இதுவரை தரமான மக்களைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். அதற்குப் பிறகு தானே அவர்கள் செய்த செயல்கள் பற்றியும் ஆடிய விளை யாட்டைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்கு முன் உங்களை ஒன்று கேட்கிறேன். செயல் என்றால் என்ன? வினை என்றால் என்ன? என்று கேட்டுவிட்டு, பதிலுக்காக வள்ளுவர் என்னைப் பார்த்தார். பதிலுக்கு நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் பார்வையில் புதிரும் பரிகாசமும் இழையோடியது. அப்படியே பார்வைகள் தொடர்ந்தன.