பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கனமான பொருட்களைத் தூக்கி யெறிதல், போன்ற நிகழ்ச்சிகள்.

நீங்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி மிக விரிவாகப் பேசியும் எழுதியும் வருகிறீர்கள். உங்கள் சொல் விளக்கம், எனக்குப் புரிய வைக்க முடியாது. அதனால், நான் நேரில் பல நிகழ்ச்சி களைப் பார்த்தால், என்னால் புரிந்து கொள்ள முடியும். அவை பற்றிய என் கருத்தையும் தெரி விக்க இயலும் என்றார் வள்ளுவர்.

நீங்கள் கூறுவது மிகவும் நியாயமே. இந்தக் காலத்து மக்களுக்கே பல விளையாட்டுக்கள் பற்றி தெரியவில்லை. விளையாட்டின் அடிப்படை விளக்கமே புரியாத போது, விளையாட்டுக்களைப் பார்க்காத நீங்கள் எப்படி விளங்கிக் கொள்வீர்கள்.

இப்பொழுதே நாம் வெளியே செல்கிறோம். பல விளையாட்டுக்களைப் பார்க்கிறோம். அதன் பிறகு, உங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்றேன்.

புதிய தமிழகமாகத் தோன்றுகிற இந்த மண்ணுலகம், ஒரு மாயா உலகமாகவே இருக்கிறது என்றபடி, புறப்படத் தயாரானார். அவருடன் சேர்ந்து செல்வதைப் பெருமையாகக் கருதி, ஒரு விளையாட்டுப் போட்டியைக் காட்ட பரபரப்புடன் நானும் புறப்பட்டேன்.