பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. எண்ணமும் திண்ணமும்

வள்ளுவரும் நானும் வழி நெடுக பேசிக் கொண்டே சென்றோம்.

மண்டிக்கிடக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து மயங்கிப் போனார் அவர்.

உள்ளத்தில் பெருகும் அன்பும் பண்பும் குறைந்து போய், இல்லத்தில் பெருகும் பிள்ளைக் கூட்டங்களைப் பற்றியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

வேறு வழி என்னவென்று தெரியாமல், வேறு வேலையை எப்படி தொடர்வது என்று புரியாமல், இந்த காலத்து மக்கள் இப்படி, உடல் இச்சை வேலையிலே வீழ்ந்து, மூழ்கிப் போய் கிடக்கின்

றார்கள்.