பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வள்ளுவர் இல்லம்

போல, இடும்பைக்குத் தீயொழுக்கம் வித்தென்றும், தீயொழுக்கம் இடும்பை தருவதைப் போல, நல்லொழுக்கம் நன்றி தரும் என்றும் கொள்ள வேண்டும்.

சிலர் நல்லொழுக்க முடையவராய் உள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் நன்மையின்றித் துன்புறு கின்றனர். சிலர் தீயொழுக்கம் உடையவராயுள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் தீமையின்றி இன்புறு கின்றனர் - இம்மாறுபட்ட காட்சிகளை நாம் காண்கின்றோ மல்லவா? விதை விதைத்தவன் விதைத்தவுடனேயே நன்மையடைவதில்லை; நன்மையடையாததோடு மேலும் மேலும் பணச் செலவும், உடல் முயற்சியும் செய்து உழல்கிறான். இப்போது அலுப்பாகவிருந்தாலும் பயிர் முற்றி விளைந்தபின் இன்புறுவானல்லவா? அதுபோலவே, நல்லொழுக்கமுடையவரும் முதலில் துன்புறுவதாகத் தெரியினும் பின்னொரு சமயம் நன்மை எய்துவார்கள். பின்னொரு சமயம் என்றால் அடுத்த பிறவியிலன்று. இப்பிறவியிலேயே, ஒரு சமயம், இவரது செயலால் உலகிற்குப் பயனுள்ளதாக மக்கள் அறிந்து கொண்டு இவர்க்குப் பல நன்மைகள் செய்வரன்றோ? ஆதலின் பின்னால் உண்டாகும் நன்மைப் பயிருக்கு இப்போது கொள்ளும் ஒழுக்கம் வித்தாகும். இஃது இப்படியெனவே, இப்போது நன்மை போல் தெரிந்தாலும் பின்னால் வரப் போகும் துன்பப் பயிரின் விளைவுக்குத் தீயொழுக்கம் முன் கூட்டி இடும் வித்தாகும் என்பதும் புலப்படும். மற்றும், தீயொழுக்கமுடையவர்கள் இப்போது இன்புற்றுக் கொண்டிருக்கும்போதே, தம் இழுக்கம் வெளியில் தெரிந்து