பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வள்ளுவர் இல்லம்

“ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து’

என்றார் வள்ளுவர். ஆனால், எல்லோரையும் ஆற்றின் ஒழுக்கித் தானும் அறனிழுக்காது நடத்துகின்ற இல் வாழ்க்கையே நோற்பாரின் நோன்மையுடைத்து என்பதும் ஈண்டு நினைவிருக்கவேண்டும். எனவே, இல்லறத் தவத்துக்குரிய இலக்கணம், அனைவருக்கும் ஆகவேண்டிய உதவிகளைச் செய்து அவரவரையும் நல்வழியில் நடத்தல், தானும் நல்வழியில் நடத்தல் என இரண்டும் உடைமை எனத் துணிக.

இதைத்தானே பிசிராந்தையார் என்னும் சங்கப் புலவர் செய்தார்! அவர் தமது பண்பாட்டால் மனைவி, மக்கள், தொழிலாளர் முதலிய எல்லோரையும் திருத்தினார்; அரசனும் நல்லவன், ஊராரும் சான்றோர்கள்; அதனால் அமைதியான நல்ல சூழ்நிலையில் நல்வாழ்வு வாழ்ந்தார் புலவர். இந்த இனிய இல்லற வாழ்வால், வயது மிக நிரம்பியும், என்றும் நரை திரையில்லாத இளைஞராகவே அவர் காணப்பட்டார். என்றும் இளமை பெற்ற இதனினும் பெரிய தவம்-பெரிய யோகம் வேறு என்ன? இதனை, தம் என்றுங்குன்றா இளமை பற்றி அவரே பாடிய

‘யாண்டு பலவாக கரையில ஆகுதல் யாங்காகியர் என வினவுதி ராயின், மாண்டஎன் மக்களொடு மனைவியும் நிரம்பினர், யான்கண் டனையர் என் இளையரும்... சான்றோர் பலர் யான் வாழு மூரே’

என்னும் புறநானூற்றுப் பாட்டால் அறியலாம்.