பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஆதலால் உலகில் வாழ்கின்றவர்கள் பொருட் செல்வத்தை மிகச் சிறந்ததாகக் கருதி அதனைத் தேடுதல் வேண்டும். பொருட் செல்வத்தினால் எத்தனையோ செயல்களைச் செய்தல் முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். - பொருள்" என்றும் செல்வம்' என்றும் கூறப்படு கின்ற பொருட் செல்வம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டுப் பேசப்படுவதற்குக் காரணம், அப்பொருளினால் செய்து முடிக்கக்கூடிய செயல்கள் பலவாகும் என்பதனாலேயே ஆகும். நினைத்த செயலினை வெற்றியுடன் முடிக்கும் ஆற்றலுக்குப் பொருட் செல்வம் மிகுதியும் துணையாக நிற்கும். பொருளுடையவர்கள் அப்பொருளின் துணையால் தப்பாமல் காரியத்தைச் செய்து முடிக்க முடியும். செய்யக்கூடிய செயலினை இருந்த இடத்தி லிருந்தே செய்து முடிக்கக்கூடிய வன்மையினையும் பொருட் செல்வம் அளிக்கும். ஒளி விளக்கு - - ஒளிதருகின்ற விளக்கானது அது இருக்கும் இடத் தில் மட்டும்தான் இருட்டினைப் போக்கும். பொருட் செல்வத்தின் சிறப்பினைக் கூறவந்த ஆசிரியர், அச் செல்வம் கினைத்த தேசத்திற்குக் சென்று இருளினைப் போக்கும் என்று அருமையாகக் கூறுகின்றார். பொருளினால் உண்டாகக் கூடிய பயனையும் சிறப்பினையும் மகிழ்ச்சியினையும் உணர்த்தும் பொருட்டு அச்செல்வம் இருளினைப் போக்குவதாகும் என்றார். எல்லா மக்களுக்கும், எலலாக் காலத்திலும் வ-9 -