பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 பகைவர்கள் தன்னைத் தாக்குகின்ற பொழுதுல தடுத்துக் காப்பாற்றிக் கொள்ளப் பெருந்துணையாக இருப்பதும் இந்த ஆயுதமேயாகும். -- ஆதலால் உலகத்தில் வாழுகின்ற வாழ்க்கையினை கன்கு அமைத்துக் காட்டி அவ்வாழ்விற்குத் தேவைப் படுகின்ற பொருட் செல்வத்தினைப் பல வகைகளில் அமைத்து உண்மையினைப் புலப்படுத்தினார். செய்க பொருளை என்று குறட்பா தொடங்கப் பெறுகின்றது. இந்த அமைப்பு நன்கு சிந்திக்கவேண்டியதாகும். பொருட் செல்வத்தினை கல்லபடி யாக ஈட்டுதல் வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டது. . பொருளைச் செய்வீர்களாக என்று கூறுகின்றார். பொருளினைச் சம்பாதிக்க வேண்டும் என்பதே. கருத்தாக அமைந்தது. தனக்கு மேலாக இருப்பவனாக நினைத்துக் கொண்டிருப்பவனைப் பொருட் செல்வ முடையவன் அச்செல்வத்தின் துணையால் தனக்குக் கீழாகக் கொண்டு வருதலும் முடியும். செய்க பொருளை அதுவே எஃகு பொருள் சம்பாதிக்கும் வழிகள் பலவகைகளாக இருப்பதனால் எல்லாவற்றிற்கும் பொதுவாக அமைத்து செய்க பொருளை என்று கூறினார். பொருள் அதிவிரைவில் கினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளது என்பதற்காகவே கூர்மை யான ஆயுதத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். எஃகு. என்பது கூர்ம்ையான ஆயுதமாகும்.