பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

15

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 15 ைகவியரசர் முடியரசன் இ கவிஞரது நூல்கள் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களில் இவர்தம் நூல்கள் முனைவர் மற்றும் 'எம்.ஃபில் பட்டத்திற்காகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இ. பாவரசர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்ற ஆய்வுநூல் முனைவர் மு. இளங்கோவன் என்பாராலும், முடியரசன் படைப்புகள் ஒர் ஆய்வு என்ற ஆய்வு நூல் முனைவர் சிரீகுமார் என்பாராலும், பூங்கொடியும் மணிமேகலையும் என்ற ஒப்பாய்வு நூல் முனைவர் மு.நிலாமணி என்பாராலும் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. ல் 'கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம் என்னும் பெயரில், புலவர் தி.மு. அரசமாணிக்கம் என்பார், ஈரோட்டில் மன்றம் அமைத்துத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார். பெற்ற பாராட்டுகள் பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக்கவிஞர், கவிமா மன்னர். கவிச் சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் பாட்டு முடியரசர், கவியுலக முடியரசர், சுயமரியாதைக் கவிஞர், தமிழிசைப் பாவலர். நெறி முறை பிறழா மாந்தர் வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச் செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர். நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப் பிழையார். ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர். நன்றி மறவாதவர், நட்புப் பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனிதநேயர், பழகுதற்கினிய